புதிய கூட்டணி ஒன்றை இம்மாதத்தில் உருவாக்கப்போவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய கூட்டணி என்ற பெயரில், இந்த கூட்டணி உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இப்புதிய கூட்டணியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்று விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால், இது தொடர்பில் கவனம் செலுத்த உள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ள மையும் குறிப்பிடத்தக்கது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)