ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்:
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறி வருகிறது. எதுவாக இருந்தாலும் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மக்கள் மத்தியிலும் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. பொது வேட்பாளர் தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.