Tuesday, April 30, 2024
Home » வெளிநாடு அனுப்புவதாக ரூ.02 கோடி 50 இலட்சம் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக ரூ.02 கோடி 50 இலட்சம் மோசடி

கொழும்பில் தலைமறைவாகியிருந்த பெண் கைது

by mahesh
April 17, 2024 8:10 am 0 comment

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக சுமார் 02 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்​தை இந்தப் பெண் மோசடி செய்துள்ளார்.

இவரது மோசடி தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இம்முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரான குறித்த பெண் கொழும்பில் பதுங்கியிருப்பதாக தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து, பெண் தொடர்பான விபரங்கள் கொழும்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட தால்,அப்பெண்ணை பொலிஸார் கைது செய் தனர்.கொழும்பிலும் இப்பெண் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்,விசாரணை நிறைவு செய்ததும் யாழ்.பொலிஸாரிடம் அவரை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT