நாட்டைப் பலம் மிக்கதாக கட்டியெழுப்பு வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணையுமாறு, முன்னாள் சகாக்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரஅழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்த தற்போதைய எம்பிக்கள் தலதா அதுகோரள, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தற்போது ஐக்கிய மக்கள் சக்தியிடம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியானது தற்போது வரி தொடர்பில் சிந்திக்கும் கொடஹேவாவினரின் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறதா -இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறதா என்பது தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்