இன்றையதினம் (16) காலையில் செயற்பட வேண்டிய 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இவ்வாறு புகையிரத சேவைகளை இரத்து செய்ய வேண்டி ஏற்பட்டதாக பயணங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை, ராகமை ஆகிய இடங்களுக்கு கொழும்பு கோட்டையிலிருந்து இயங்கும் புகையிரத சேவைகள் மற்றும் குறித்த புகையிரத நிலையங்களில் இருந்து மீண்டும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்குச் செல்லும் புகையிரத சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புத்தாண்டை நிறைவு செய்து பணிக்கு சமூகமளிக்கவிருந்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.