Saturday, April 27, 2024
Home » ஏற்றுமதி மையமாக இந்தியாவை நோக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்

ஏற்றுமதி மையமாக இந்தியாவை நோக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்

by Rizwan Segu Mohideen
March 29, 2024 3:55 pm 0 comment

உற்பத்தி கைத்தொழில் துறை மற்றும் ஈ வர்த்தகத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளின் பின்புலத்தில் ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை ஏற்றுமதிக்கான மையமாக நோக்குவதாக கிறீன்பேஸ் கைத்தொழில் பூங்காவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகளையும் களஞ்சியசாலைகளையும் அமைக்கவும் விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக தென்னிந்திய கைத்தொழில் பூங்காவும் விளங்குகிறது என்றும் இப்பூங்காவின் அதிகாரியான எஸ். ரகுராமன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘ரொய்ட்டர்’ செய்தி சேவைக்கு மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதனால் புவியரசியலின் பின்புலத்தில் சீனாவுக்கு அப்பால் கைத்தொழில் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கும் நிறுவனங்களின் முதன்மை இலக்காக இந்தியா உள்ளன.

1.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் இந்தியாவில் கைத்தொழில் உற்பத்தி துறைகளுக்கான தொழிலாளர்களை மாத்திரமல்லாமல் நுகர்வோரையும் தாராளமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று கருதும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தென்னிந்தியாவின் கைத்தொழில் பூங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகளையும் களஞ்சியசாலைகளையும் அமைக்கவும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிளக்ஸ்டோன் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நிரஞ்சன் ஹிராநந்தனியினால் இப்பூங்கா நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT