பூட்டானில் கியலட்சுயன் ஜெட்சுன் வங்க்சுக் தாய் சேய் மருத்துவமனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரப் பாதுகாப்பில் வலுவான கூட்டாண்மையின் பிரகாசமான உதாரணத்தைக் எடுத்துக் காட்டுகிறது.
புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை, பூட்டானில் தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளின் தரத்திற்கு மதிப்பு சேர்க்கும் என்று வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் திறந்து வைத்தனர்.
150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசு உதவி அளித்துள்ளது.
“மருத்துவமனையின் முதல் கட்டம் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு 2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.119 கோடி செலவில் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
புதிய மருத்துவமனை மகப்பேற்று மருத்துவ வசதி, மயக்கவியல், அறுவை சிகிச்சை நிலையம்,சிசு தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது.
அதிநவீன மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு முழு நிதியுதவி அளித்த இந்திய அரசாங்கத்திற்கு பூடான் பிரதமர் டோப்கே நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடியால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பூடானின் சுகாதார அமைச்சர் டான்டின் வாங்சுக், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பின் நிரூபணம் என்று குறிப்பிட்டார்.
“இந்த வசதிகள் அனைத்தும் இந்திய அரசின் உதவியுடன் மற்றும் கூட்டுறவுடன் கட்டப்பட்டது” என்று தெரிவித்த அவர் இது வலுவான இருதரப்பு உறவின் அடித்தளத்தை உருவாக்கும் கூட்டு முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு பூடானுக்கு இன்று காலை விமானம் மூலம் புதுடெல்லி சென்றார். ஒரு சிறப்பு சைகையில், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பூட்டான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பார்க்க வந்தனர். (ANI)