இலங்கை விமானப்படை மற்றும் ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் ஆகியன நவீன, விண்வெளி தொழினுட்பம் மற்றும் ட்ரோன் திறன்களில் முன்னேற்றத்திற்கான உத்திசார் கூட்டுறவை உருவாக்குகிறது.
தொலைநோக்கு நடவடிக்கையாக, தொழில்நுட்ப ஆலோசனை, ஒத்துழைப்பு, பயிற்சிகள் , தரவுப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) ஒத்துழைப்பு, வளப் பகிர்வு ஆகியவற்றைப் பெறும் நோக்கில் இந்த கூட்டுறவு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் (25) விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பொறியாளர்.(டாக்டர்.) சனத் பனவென்னகே, ஆர்தர் சி கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.