120
பலாங்கொடை கல்தொட்ட பிரதான வீதியின் நவநெலிய பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக இவ்வீதியின் ஊடாக ஹம்பேகமுவ, தனமல்வில, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மண்மேடு மற்றும் பாரிய கற்கள் மரங்கள் வீதியில் விழுந்துள்ளன. இவற்றை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரதேசத்தில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.