நாவலப்பிட்டி, குருந்துவத்த ரோயல் கல்லூரி புதிதாக ஆரம்பிக்கப்பட்டு 15 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு தொழில்நுட்ப கூடமொன்று அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.
அத்துடன் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேற்படி நிகழ்வுக்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே பிரதம அதிதியாகவும், கல்லூரியின் ஸ்தாபகரரான கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, கரப்பந்தாட்டப் போட்டி, மரநடுகைத் திட்டம், சமூக நல வேலைத்திட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி லலித் யூ கமகே தெரிவிக்கையில், மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளங்களை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(அக்குறணை குறூப் நிருபர்)