54
யாழ். அச்சுவேலி பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மகிழடி வைரவர் ஆலயத்தில் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மகிழடி வைரவர் ஆலயத்தில் நடைபெற்ற அலங்கார திருவிழா நிறைவின் சப்பரத் திருவிழாவின் போது நேற்று முன்தினம் அவர் திருவிழா உபயகாரர்களாலும் ஆலய தொண்டர் சபையினராலும் கௌரவிக்கப்பட்டார். திருவிழாவின் போது ‘வைரவர் வழிபாட்டின் மகத்துவம்’ என்ற தலைப்பில் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆன்மிக உரையாற்றியிருந்தார்.
இதன்போது மேற்படி ஆலய பிரதம குரு சிவசிறீ க.ஓம்முருகையா சிவாச்சாரியார், சிவசிறீ பா.சோமசுந்தர குருக்கள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
கரவெட்டி தினகரன் நிருபர்