Minor Mortivation நிறுவனத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பாடசாலை அதிபர்கள், சட்டத்தரணிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள், விளையாட்டுகழகங்களின் தலைவர்கள், இளைஞர்கள், சமூக மட்ட தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எய்ம்ஸ் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளரும் கணக்காளருமான எஸ்.எம்.ஏ.சக்கி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.றிபாஸ், சாத் நிறுவன பணிப்பாளர் ஏகே.அமீர் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.
இதன்போது சமூகத்தில் சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டன.
திராய்க்கேணி தினகரன் நிருபர்