Monday, May 20, 2024
Home » ஐ.தே.௧வின் JSS சங்கத்தின் தேர்தலை நடத்த அனுமதி

ஐ.தே.௧வின் JSS சங்கத்தின் தேர்தலை நடத்த அனுமதி

மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு

by Gayan Abeykoon
May 9, 2024 5:07 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் கீழ் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான தேசிய ஊழியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த, நுகேகொட மாவட்ட நீதிமன்றம் நேற்று (08) அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தலுக்கு எதிராக, நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் சிலர் இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

இந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி அதிகாரபூர்வமாக தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படுமென அதன் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT