ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் கீழ் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான தேசிய ஊழியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த, நுகேகொட மாவட்ட நீதிமன்றம் நேற்று (08) அனுமதி வழங்கியுள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தலுக்கு எதிராக, நுகேகொடை மாவட்ட நீதிமன்றத்தில் சிலர் இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
இந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி அதிகாரபூர்வமாக தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படுமென அதன் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.