Thursday, May 9, 2024
Home » சொந்த ஊரில் கடமை புரியும் பொலிஸாருக்கு இடமாற்றம்

சொந்த ஊரில் கடமை புரியும் பொலிஸாருக்கு இடமாற்றம்

ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

by mahesh
March 27, 2024 6:50 am 0 comment

பொலிஸார் மற்றும் பொலிஸ் துறை சார்ந்த அதிகாரிகள் தமது சொந்த ஊரில் கடமையில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் முதல் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரையிலான பதவி வகிப்போர், அவர்களது சொந்த ஊர் அல்லது அவர்களது மனைவியரின் சொந்த ஊரிலும் கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போது கடமையிலுள்ள இத்தகைய பொலிஸ்துறை சார்ந்தவர்கள், தமது ஊரில் அல்லது தமது ஊருக்கு அருகாமையில் உள்ள ஊரில் அல்லது அவர்களது மனைவியின் ஊரில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT