Thursday, May 9, 2024
Home » சிறுவர், பெண்களுக்கு எதிராக 1077 முறைப்பாடுகள் பதிவு

சிறுவர், பெண்களுக்கு எதிராக 1077 முறைப்பாடுகள் பதிவு

by sachintha
March 26, 2024 6:23 am 0 comment

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு பணியகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி வரை, 1077 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். 109 என்ற தொலைபேசி இலக்கமூடாக இம்முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தொலைபேசி இலக்கம் கடந்த (10) ஞாயிற்றுக் கிழமையிலிருந்து 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 477 மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.இன்னும்

42 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும்,எட்டு முறைப்பாடுகள் இணக்க சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 550 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT