வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்பட வேண்டுமென, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்,எட்டுப் பேரை கைது செய்தனர்.தொல் பொருட்கள் சின்னங்களை சேதப்படுத்தியதாக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.