166
சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் எதிர்வரும் 3ஆம் திகதி காலை 8 மணிக்கு மாத்தளை பௌத்த மந்திர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பத்திரிகை சங்கத்தின் 4வது வருடமாக இடம்பெறும் இந்த இரத்த தான முகாமில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டகொட மற்றும் மாவட்ட செயலாளர், மாத்தளை மாநகர சபை ஆணையாளர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)