191
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அவரது இடத்துக்கு எஸ்.சி.முதுகுமாரண நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன அண்மையில் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், அநுராதபுரம் மாவட்ட பட்டியலில் அவருக்கு அடுத்து அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எஸ்.சி.முதுகுமாரண அந்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)