சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை 2024 மகோற்சவம் தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகின்றது. இம்முறை மேற்படி மகோற்சவம் இலங்கையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிற்றுக் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் ஹரியானா மாநில குரப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வு புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் இடம்பெறும்.
நிகழ்வினை கலாசார அமைச்சு, இந்து கலாசார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியன இணைந்து சர்வதேச பகவத் கீதை மகோற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வில் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தினகரன் நிருபர்