Thursday, May 9, 2024
Home » காணாமல் போன 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை

காணாமல் போன 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை

- சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரும் கைது

by Prashahini
February 16, 2024 10:57 am 0 comment

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் காணாமல் போன 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ,

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேகநபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

அருகில் இருந்த CCTV கெமராக்களின் உதவியுடனும் ,ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று (16) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT