Friday, May 10, 2024
Home » குடு சலிந்துவின் பிரதான சகா கைது

குடு சலிந்துவின் பிரதான சகா கைது

- துபாயிலிருந்து இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

by Prashahini
February 15, 2024 11:19 am 0 comment

பாதாள உலக தலைவர்களில் ஒருவரான ‘குடு சலிந்து’ எனப்படும் சலிந்து மல்ஷிகவின் பிரதான சகா ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குடு சலிந்துவின் பிரதான சகாவான “பியூமா” ஹஸ்திக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இதற்கமைய, துபாயிலிருந்து இன்று (15) அதிகாலை 04.50 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அழைத்து வரப்பட்ட இந்த குற்றக் கும்பல் உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள வளாகத்தின் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT