Monday, April 29, 2024
Home » இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

- இன்று முதல் சட்டமாக அமுலுக்கு வருகிறது

by Rizwan Segu Mohideen
January 31, 2024 2:52 pm 0 comment

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படும் சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்று அங்கீகரித்தல் மற்றும் செயற்படுத்துதல் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT