191
வடமாகாணத்தில் 38 வருடங்களுக்கு பின்னர் திரிசாரணர் Rover Scout தமிழ் மூல பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20, 21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட இப்பாடநெறியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 27 பேர் கலந்துகொண்டனர்.
தலைமைப் பயிற்சியாளரும், உதவித் தலைமை ஆணையாளருமான வைத்தியர் மஞ்சுள சஹபந்து, இப்பாடத்திட்டத்தை வழிநடத்தியதுடன் சாரணர் தலைமையக உதவி ஆணையாளர் அமல் ராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
எதிர்கால சந்ததியினருக்கு இந்த திரிசாரண தலைவர்களின் திரிசாரணியம் விஸ்தரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.