Home » தளம்பல் நிலை: பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும்

தளம்பல் நிலை: பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும்

- பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை

by Rizwan Segu Mohideen
May 16, 2024 7:39 am 0 comment

– சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT