Home » பெரும்பாலான மக்களால் கூட்டுச் சேர்ந்து அமைக்கப்பட்ட Softlogic Life இன் கிறிஸ்மஸ் மரம்

பெரும்பாலான மக்களால் கூட்டுச் சேர்ந்து அமைக்கப்பட்ட Softlogic Life இன் கிறிஸ்மஸ் மரம்

by mahesh
January 31, 2024 3:02 pm 0 comment

இலங்கையின் 2ஆவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, கொழும்பு நகரில் உள்ள மிகவும் பிரபலமான Galle Face சுற்றுவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது சின்னமான காய்கறி கிறிஸ்மஸ் மரத்தை அமைத்தது. இலங்கையின் நான்கு பக்கத்திலும் உள்ள மக்களால் நடப்பட்டு, Softlogic Life க்கு அனுப்பப்பட்ட மரக்கறி செடிகளால் உருவாக்கப்பட்ட இந்த கிறிஸ்மஸ் மரம், இலங்கையின் முதன்முதலில் காய்கறி செடிகளால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இலங்கையர்களுக்கு காய்கறி விதைப் பொதிகளை விநியோகிப்பதன் மூலம் Softlogic Life ஒரு முனைப்பான அணுகுமுறையை எடுத்தது. இந்த சிந்தனைமிக்க முயற்சியானது, காய்கறி செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ள நபர்களை ஈடுபடுத்தி, இந்த வரலாற்று தருணத்தின் ஒரு பங்காளராக அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது, ஆனால் மிக முக்கியமாக சக இலங்கையர்களை குறைந்தபட்சம் அவர்களின் உணவுத் தேவைக்கான ஒரு பகுதியாகவது வளர்க்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த கண்ணோட்டத்துடன் வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கின்றது. இலங்கையின் முதன்முதலில் காய்கறிச் செடிகளால் ஆன கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதற்கான பரவலான ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பிராந்தியங்களில் இருந்து கோரிக்கைகள் குவிந்து வருவதால், எதிர்பார்ப்புகளை விட அதிகமான பதில் கிடைத்தது. பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், Shree FM உடன் இணைந்து, அனுராதபுரம், பேராதனை, மாத்தறை, காலி, கொட்டாவ, கம்பஹா மற்றும் சிலாபம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு இந்த தாவரங்களை சேகரிக்க சிறப்பு ட்ரக் வண்டிகள் அனுப்பப்பட்டன. பொதுமக்களின் பங்களிப்புகள் மட்டுமின்றி, பள்ளிகளும் இணைந்து இந்த திட்டத்திற்காக செடிகளை கையளித்தன.

டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரை கொழும்பில் உள்ள (ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்) உள்ள சின்னமான காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில், பல்வேறு வகையான மற்றும் போஷாக்கு மதிப்புள்ள 2000க்கும் அதிகமான மரக்கறி செடிகளை உள்ளடக்கிய கிறிஸ்மஸ் மரம் நிறுவப்பட்டது. 12 அடி அகலமும், மொத்தம் 30 அடி உயரமும் கொண்ட இந்த மரம் ஊதா மற்றும் பச்சை முட்டைக்கோஸ், சீனக் பசளி, கத்தரிக்காய், நீர்ப்பசளி, Bird’s Eye and green chillies கந்தாரி மற்றும் பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளால் ஆனது.

இந்த தனித்துவமான கிறிஸ்மஸ் மரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களில் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது, இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இலங்கையின் பரபரப்பான சுற்றுவட்டத்தில், கடும் சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் கடல் காற்று போன்ற சவால்களை எதிர்த்து நின்று 10 நாட்களுக்கு மேல் அமைந்திருந்தது. Softlogic Lifeஆல் இத்தகைய சூழல் நிலைமைகளில் இத்திட்டத்தினை வெற்றிகரமாக செய்ய முடிந்தால், அனைவரும் தங்கள் வீட்டு முற்றத்தில் கூட சொந்த வீட்டுத் தோட்டத்தை செய்ய ஆரம்பிக்கலாம். இத்தகையதொரு முக்கியமான செய்தியை இலங்கைக்கு தெரிவிப்பதற்காகவே இத்திட்டமானது Softlogic Lifeஆல் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு: நீங்கள் எங்காவது ஒரு குச்சியை எறிந்தாலும், அது எங்கிருந்தாலும், அது நடப்படும், ஏனென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் இலங்கை மிகவும் வளமான மண்ணால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த தேசம் உண்மையிலேயே இன்னும் பல வழிகளில் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த ஆசீர்வாதங்களை ஒரு பலமாகப் பயன்படுத்தி, நாம் கற்பனை செய்யும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வழிகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும். அதிக சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் கடல் காற்று போன்ற பல சவால்களைத் தாங்கி, பரபரப்பான கொழும்பின் மையத்தில் உயர்ந்து நிற்கும் இலங்கையின் முதல் காய்கறி கிறிஸ்மஸ் மரமானது, அந்தச் செய்தியின் அடையாளமாகும்என்று சந்தைப்படுத்தல் – துணைத் தலைவர் சமிந்திரி பிலிமதலாவே கூறினார்.

இந்த பிரமாண்டமான காய்க்கறியால் ஆன கிறிஸ்மஸ் மரம் குறித்து Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் கூறுகையில், “பொறுப்பான பெருநிறுவன பிரஜை என்ற வகையில், எமது சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். நாம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்தினர், அத்துமட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. நாம் வெளிப்படையாகவும், தைரியமாகவும், வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருந்தால், நாம் பல விஷயங்களைப் பயன்படுத்த முடியும். இது போன்ற ஒரு பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவதற்கு ஒரு காரணம், எங்கள் மத்தியில் இதையே நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், ஒரு ஆயுள் காப்பீட்டாளராக, செயல்முறைகள், தயாரிப்பு, சேவைச் சிறப்பு, நிதி ஆகியவற்றில் புத்தாக்கமாக இருந்தாலும், எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் அதிகபட்ச மதிப்பை உருவாக்குவதற்கு மிகவும் சவாலான காலகட்டங்களில் கூட வாய்ப்புகளை விழிப்புடன் பார்ப்பதில் நாங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கிறோம். இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக மாறுவதற்கு மிகவும் கொந்தளிப்பான சில காலங்களில் சந்தை தளங்களை சீராக நகர்த்துவதற்கு எங்களின் இந்த உணர்வு உறுதுணையாக இருந்தது.” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT