நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டக் கல்வி பணிப்பாளரும் ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறையில் ஆசிரியராக, பிரதி அதிபராக, அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற பெரியசாமி அரியான் ஹரிசந்திரன் அகில இலங்கை ரீதியில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று கல்வி நிர்வாக தரத்திற்கு சேவை மூப்பு அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்,
இதில் முதல் மூன்று இடங்களை பெரும்பான்மை சமூகத்தினர் பெற்றுக்கொண்டுள்ளனர். சிறுபான்மையினர் சார்பாக தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் ஹோல்புறூக் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார். வெளிவாரி பட்டத்தாரியாக கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து ஆசிரியராக 1984ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை குறூப் நிருபர்