181
களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹபொல பல்கலைக்கழக உதவித் தொகையான ரூ. 5,000 போதாது என்பது உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, நேற்றிரவு (29) பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து கலைக்க, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.