Thursday, May 9, 2024
Home » முல்லைத்தீவில் இ.போ.ச பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

முல்லைத்தீவில் இ.போ.ச பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

- இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

by Prashahini
January 15, 2024 10:52 pm 0 comment

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்று (15) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ் சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இ.போ.ச பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT