160
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு புகை விசுறும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ. எம்.முகம்மது இஸ்ஸதீன் தெரிவித்தார்.இதனை முன்னிட்டு,வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை துப்பரவு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(ஒலுவில் விசேட நிருபர்)