இலங்கை மெதடிஸ்ட் சர்ச் காது கேளாதோர் Deaf Link நிறுவனத்தின் பூரண அனுசரணையில் சாலியபுர சாந்தி நிழல் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர வின் தலைமையில் கடந்த (01) வைத்திய முகாம் நடைபெற்றது.
வடமத்திய மாகாண சமூக சேவை பணிப்பாளர் மற்றும் மத்திய நுவரகம் பிரதேச செயலாளர் ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் வைத்திய முகாம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
Deaf Link நிறுவனத்தின் அனுசரணையில் நடத்தப்பட்ட 20 ஆவது வைத்திய முகாம் இதுவாகும். இதன் போது இரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, சிறுநீரகம் ,கொலோஸ்ரோல் வெளிப்புற மருத்துவ பரிசோதனை , பல் நிரப்புதல், பல் பிரித்தெடுத்தல் , வாய் வழி புற்றுநோயைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றதுடன். மருந்து வகைகளும் சக்கர நாற்காலி ஊண்டுகோல் மற்றும் மூக்கு கண்ணாடிகளும் இதன்போது இலவசமாக வழங்கப்பட்டன.
அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை தெமடிஸ்ட் சர்ச் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட பொறுப்பாளர் ரவிந்ர குமார் (போதகர் ) Daef Link நிறுவனத்தின் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெயவூலா ஜெயகுணரூபன், மாவட்ட இணைப்பாளர் சாமர பிரசன்ன சில்வா உட்பட Daef Link நிறுவன அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன், திறப்பனை தினகரன் நிருபர்கள்