மக்களின் வாகனக் கனவுகளை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, ஜா எல மாருதி இல்லம் தனது 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. பலரின் முதல் காரான, மாருதி கார்களை மிகவும் நியாயமான மற்றும் வசதியான விலையில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் ஜா எல மாருதி வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமாகவும், குத்தகை விதியின் கீழ் மாருதி காரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜா எல மாருதி இல்லம் தனது சேவை நடவடிக்கைகளை 4 மாருதி கார்களுடன் தொடங்கியது. அன்று தொடக்கம், ஜா எல மாருதி இல்லம் நாட்டின் அனைத்து மாவட்ட வாடிக்கையாளர்களுக்கும் உயர்தர மாருதி கார்களை வழங்கியுள்ளது.
நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற குத்தகை நிறுவனங்களுடன் இணைந்து மிகக் குறைந்த முன்பணம் செலுத்தி சில மணிநேரங்களுக்குள் பரிவர்த்தனையை முடிக்க மாருதி இல்ல ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். மாருதி காரைப் பற்றி விசாரிக்க தொலைபேசியில் அழைப்பு விடுத்து முதல் காரை வாங்கும் வரை மிக உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் பாராட்டை ஜா எல மாருதி இல்லம் வென்றுள்ளது. ஜா எல, கொட்டுகொட, ஓபாதா பிரதேசத்தில் அழகிய சூழலில் அமைந்துள்ள மாருதி இல்லம் ஒரு பெரிய வாகன தளம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலக வளாகத்தைக் கொண்டுள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவாறு விரும்பும் வண்ணத்திலும், தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையிலும் மாருதி காரை வாங்கலாம்.
காரை விலைக்கு வாங்கும் போது, அதனை நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வழங்குவது ஜா எல மாருதி இல்லத்தின் மற்றொரு நம்பகமான ஏற்பாடாகும்.
மேலும், ஜா எல மாருதி இல்லம் தனது காரை விற்க விரும்புபவர்களுக்கு காரை மாருதி இல்லத்திற்கு கொண்டு வந்து நியாயமான விலையில் விற்கும் வாய்ப்பை வழங்க தயாராக உள்ளது. பசுமை கொடுக்கல் வாங்கல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மாருதி காரை வாங்குபவர்களுக்கு ஜா எல மாருதி இல்ல நிறுவனத்தால் மாமரக் கன்றொன்றை வழங்குவது பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜா எல மாருதி இல்லம் சமூக ஊடக வலையமைப்புகளில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
ஜா எல மாருதி இல்ல முகநூல் பக்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மாருதி யூடியூப் சேனல் ஆறாயிரம் சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. மினுவாங்கொடை ஜனாதிபதி கல்லூரியின் பிரபல முன்னாள் மாணவரான ஜா எல மாருதி இல்ல தலைவரான ஏ. ஏ.ஈ.கே.அத்தனபொல இலங்கையின் பிரபல தனியார் நிறுவனமொன்றின் நிறைவேற்றுப் பதவியில் பல வருடங்களாகப் பணியாற்றியவர்.
எனவே, ஜா எல மாருதி இல்ல ஊழியர்கள் மிக உயர்ந்த அளவிலான சேவையை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குவதற்கு சரியான தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் பெற்றுள்ளனர்.