முச்சக்கரவண்டி சாரதியிடம் எரிபொருளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கைது செய்துள்ளதாக, வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனது முச்சக்கர வண்டியின் முன்பக்கத்தில் சிறிய புத்தர் சிலை ஒன்றையும் செயற்கை யானைத்தந்தங்களையும் அழகுக்காக வைத்திருந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் அவ்வாறு வைத்துள்ளமை தவறென இப்பொலிஸார் தெரிவித்தனர். இவரிடமிருந்து குற்றத்துக்கு தண்டப்பத்திரம் வழங்காமல், அவரது முச்சக்கர வண்டியிலுள்ள ஒரு லீற்றர் பெற்றோலை இலஞ்சமாக இப்பொலிஸார் பெற்றுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் மாவத்தகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்