Monday, May 6, 2024
Home » ஷுஹதாக்களை நினைவுகூர்ந்து அக்கரைப்பற்றில் விசேட வைபவம்

ஷுஹதாக்களை நினைவுகூர்ந்து அக்கரைப்பற்றில் விசேட வைபவம்

by mahesh
November 22, 2023 11:10 am 0 comment

அக்கரைப்பற்று ஷுஹதா ஞாபகார்த்த அமைப்பினர் ஏற்பாடு செய்த,ஷுஹதாக்கள் நினைவு தினம், விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் அண்மையில், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது.

கலாநிதி அல்-ஹாபில் எம்.ஐ.எம் சித்தீக் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வில், உலமாக்கள், மௌலவிமார்கள், அரபிக்கல்லூரி மாணவர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

விசேட துஆப்பிராதனையை அபூபக்கர் சித்தீக் இஸ்லாமியக் கல்லூரி அதிபர் மௌலவி எம்.எம். கலாமுல்லாஹ் (ரசாதி) நடாத்தினார். நாட்டில் நிலவிய அசாதாரண காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் நினைவாக நடந்த இந்நிகழ்வு, ஷுஹதாக்கள் அமைப்பின் தலைவர் எம்.ரீ.ஜமால்தீன் தலைமையில் நடபெற்றது.

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT