Tuesday, April 30, 2024
Home » பேருவளை, மாலேவன விகாராதிபதியின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
இன நல்லிணக்கத்திற்காக செயற்பட்ட

பேருவளை, மாலேவன விகாராதிபதியின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

சீனன்கோட்டை பள்ளிச்சங்கம் அனுதாபம்

by damith
November 20, 2023 10:51 am 0 comment

பேருவளை மாலேவன விகாராதிபதி அதி. வணக்கத்திற்குரிய மாலேவன சோபித நாயகதேரரின் திடீர் மறைவு பேருவளை பிரதேச இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் ஒற்றுமைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமென பேருவளை சீனன்கோட்டை பள்ளிச்சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேருவளை பிரதேசத்தில் அன்று தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுடன் பெரும்பான்மை சமூகத்தினர் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் மாலேவன விகாரைக்கும் சீனன்கோட்டை முஸ்லிம்களுக்கும் வரலாற்றுரீதியாக நிறைய தொடர்புகள் இருந்து வந்தன. இன்றும் இருக்கின்றன.

அதனை இறுதி வரை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் மறைந்த விகாராதிபதி சோபித தேரர் செயற்பட்டு வந்ததை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூர்வதோடு தொடர்ந்தும் அந்த ஒற்றுமை எதிர்காலத்தில் தொடர வேண்டுமெனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள் பள்ளிச்சங்கம், அன்னாரின் மறைவுக்கு சீனன்கோட்டை மற்றும் பேருவளை முஸ்லிம்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பள்ளிச்சங்கம் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள குருந்துவத்தை விகாரைக்கு நேற்று (19) பள்ளிச்சங்க உறுப்பினர்கள், பிரதேச முஸ்லிம் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT