Home » நெற்செய்கையில் பீடைதாக்கம் ஏற்பட வாய்ப்பு
கட்டுக்கரைக்குளத்தின் கீழான

நெற்செய்கையில் பீடைதாக்கம் ஏற்பட வாய்ப்பு

by mahesh
November 1, 2023 7:30 am 0 comment

மன்னாரில் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் காலபோக நெற்செய்கையில் பீடைத் தாக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இது தொடர்பாக விவசாயிகள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவு, முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் ஸ்ரீராஜேஸ் கண்ணா தெரிவித்தார்.

நெற்செய்கையில் பீடைத் தாக்கம் ஏற்படுவ​தை பார்க்கிலும், பனிப்பூச்சிகளின் தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கட்டுக்கரைக்குளத்தின் கீழ் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் நடப்பாண்டு காலபோக செய்கையை மேற்கொள்வதில் காலதாமதமாகியுள்ளது. ஆயினும், போதியளவான நீர் கிடைக்கக்கூடிய நிலைமை ஏற்படுமென்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

தலைமன்னார் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT