154
நேபாளத்தில் நடைபெற்ற ஆசியாக் கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பலகாமம் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான டபிள்யூ.பிரியந்தகுமார பங்கேற்றுள்ளார். சக்கரநாற்காலி ஆசிய கிண்ணத்தில் இரண்டாமிடத்தை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் மாற்றுத் திறனாளியான பிரியந்தவுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று பிரியந்த குமாரவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)