Wednesday, May 15, 2024
Home » பசுமை பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்த மேலும் காணிகள்

பசுமை பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்த மேலும் காணிகள்

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

by damith
April 29, 2024 6:15 am 0 comment

ஹோமாகம பிடிபன மாஹே னவத்த பசுமை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக 14 ஏக்கர் காணியையும் மூன்றாம் கட்டத்துக்காக, 20 ஏக்கர் காணியையும் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகர கருத்திட்டத்திற்கிணங்க கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளை முன்னேற்றும் நோக்கில், அரசாங்கத்திற்கு சுவீகரிக்கப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் 300 ஏக்கர் காணி தற்போது நீண்ட கால குத்தகை அடிப்படையில் கேந்திர அபிவிருத்தி திட்டத்திற்காக பகிர்ந்த ளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, பசுமை பல்கலைக்கழகத்தின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளர்களின் தீர்மானத்திற்கு இணங்க பெறுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வருடம் என்ற நீண்ட கால குத்தகை அடிப்படையில் பசுமை பல்கலைக்கழகத்திற்கு இந்த காணி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT