99
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி, மக்களை ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி செயலகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறானவர்கள், போலியான ஆவணங்களைக் காட்டி முதலீட்டாளர்கள், வேலைதேடுவோர் மற்றும் விசா விண்ணப்பதாரர்களை ஏமாற்றுவதாக ஜனாதிபதி செயலகம் எச்சரித்துள்ளது.
இவ்வாறானவர்களிடம் ஏமாந்து பணத்தை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட் டுள்ளது. இவ்வாறான மோசடி நபர்கள் தொடர்பில் 0715 308 032 தொலைபேசி இலக்கமூடாக, உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்திடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.