தெற்கு மெக்சிகோ மாநிலமான சியாபாஸில் சரக்கு வண்டி ஒன்று கவிழ்ந்ததில் அதற்குள் ஒளிந்து வந்த 10 கியூப நாட்டு குடியேறிகள் உயிரிழந்துள்ளனர்.
குவாந்தமாலா எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலை ஒன்றில் இந்த விபத்து இடம்பெற்றதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதில் மேலும் 17 பேர் காயமடைந்திருப்பதோடு உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.
பலரையும் ஏற்றிச் செல்வதற்கு பொருத்தமற்ற அந்த டிரக் வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அமெரிக்காவை அடைய முயற்சிக்கும் குடியேறிகள் பயன்படுத்தும் பசிபிக் கடற்கரையை ஒட்டிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிறன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.