343
மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் பத்துப் பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் இடிபாட்டில் சிக்கியுள்ளனர்.
சியுடாட் மெட்ரியோ நகரில் உள்ள சான்டா க்ரூஸ் தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற இந்த விபத்துக் காரணமாக 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேவாலயத்திற்குள் சுமார் 100 பேர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோதே கூரை இடிந்து விழுந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிறுவர்களும் இருந்ததாகவும் அவர்களை காப்பற்றுவதற்கு மீட்பு நடவடிக்கைகளை ன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.