பாலமுனை மெறூன்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ‘பாலமுனை சம்பியன்’ மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாலமுனை அறபா விளையாட்டுக் கழக அணி கிண்ணத்தை வென்றது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (16) கழகத்தின் தலைவர் அபூசாலி தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். சபீஸ் எனப் பலரும் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் அறபா அணியினர் நிர்ணயித்த 60 ஓட்ட வெற்றி இலக்கை பாலமுனை மஹாசீர் விளையாட்டுக் கழக அணியினர் பெறத் தவறினர்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்