AICPA & CIMA மற்றும் ICCSL (சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கை) என்பவை இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில், இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10 நிறுவனங்களுள் Aitken Spence இடம்பிடித்துள்ளது. இலங்கையில் மிகவும் உயர் தராதரங்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்த மிகச்சிறந்த 10 நிறுவனங்களுள் அடங்குகின்றன.
இந்நிகழ்வில் கொழும்பின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் பல வெளிநாட்டு தூதரகங்களின் இராஜதந்திரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக ஜனாதிபதியின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க கலந்து கொண்டார். இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் உபதலைவர் கட்சுகி கொடாரோ இந்நிகழவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதற்கான மதிப்பீடுகளில் CIMA உறுப்பினர்கள் குழு (CGMAs), செய்த நிதி மதிப்பீடும் உள்ளடங்கியுள்ளது. அதன் பின்னர் KPMG குழு மதிப்பீட்டு புள்ளிகளை அங்கீகரித்து அடுத்த சுற்றுக்காக முதல் 20 நிறுவனங்களை தெரிவு செய்தது.
இரண்டாவது சுற்றின் போது அத்தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் நடுவர் குழாமுக்கு விளக்கக்காட்சி உரையும் நிகழ்த்தப்பட்டது. நடுவர் குழாமிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டலின் அடிப்படையில் சிறந்த விளக்கக்காட்சி உரைக்காக Aitken Spence பாராட்டைப் பெற்றது.