515
வட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயம் வெற்றியீட்டி அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அநுராதபுரம் பண்டுகாபயபுர விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் முஸ்லிம் மஹா வித்தியாலய அணி அநுராதபுரம் மத்திய கல்லூரி அணியை தோற்கடித்து வட மத்திய மாகாணத்தில் முதலிடத்தை பெற்றது. இந்த வெற்றியை அடுத்து பாடசாலை கால்பந்தாட்ட அணியை வரவேற்றும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.