மாத்தறை அரசினர் வைத்தியசாலைக்கு புதிய CT ஸ்கேன் இயந்திரம் வழங்குதல் மற்றும் மாத்தறை மாவட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகள் பற்றி கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரன தலைமையில் மாத்தறை அரசினர் வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்றது.
இதில் கம்புறுகமுவ வைத்தியசாலைக்கு அடுத்த வருடம் புதிய கட்டடமொன்று அமைத்துக் கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இவ்வருடம் இவ் வைத்தியசாலைகளுக்கு நவீன உபகரணங்களை கொள்வனவு செய்யவும் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வைத்திய அதிகாரிகள், தாதிமார்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(வெலிகம தினகரன் நிருபர்)