Monday, April 29, 2024
Home » சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிலையம் மத்தேகொடையில் திறப்பு

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிலையம் மத்தேகொடையில் திறப்பு

- ரூபா.3 விலைக்குறைப்புடன் எரிபொருள் விற்பனை

by Prashahini
September 1, 2023 11:31 am 0 comment

சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.

சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக ரூபா. 3 குறைவாக லீற்றர் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சினோபெக் நிறுவனம் தயாராகி வருகின்றது.

இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் சினோபெக் நிறுவனம் கடந்த மே மாதம் கையெழுத்திட்டது.

இதன்மூலம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான 20 ஆண்டுகால உரிமம் வழங்கப்பட்டுள்ளது

எனவே, இரண்டு எரிபொருள் கப்பல்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இதன்மூலம் கட்டம் கட்டமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாட்டில் திறக்கப்படவுள்ளன.

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT