127
களுத்துறை நாகொடை அரசாங்க பெரிய ஆஸ்பத்திரியின் வார்ட் ஒன்றுக்கு தேவையான மின் விசிறிகளை சீனன் கோட்டையை சேர்ந்த சமூக சேவையாளர் நிலார் பாரூக்கின் வழிகாட்டலின் கீழ் சீனன்கோட்டை பரோபகாரிகளின் நிதி உதவியுடன் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மின்விசிறிகள் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அவந்தி மற்றும் ஆஸ்பத்திரி விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிலங்க ஆகியோரிடம் சீனன்கோட்டையைச்சேர்ந்த எம்.ஆர் பர்ஹான் ஹாஜியார் மற்றும் சமூக சேவையாளர் நிலார் பாரூக் ஆகியோர் அண்மையில் கையளித்தனர்.