நேற்று கைதான 6 இந்திய மீனவர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்

கைதான 6 இந்திய மீனவர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்-6 Indian Fishermen Remaned Till March 04

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (19) அதிகாலை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 6 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்களை மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...