புல்மோட்டை, பம் ஹவுஸ்: இரு குழுக்களிடையே காணித் தகராறு; 2 பேர் பலி

- மேலும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- உயிரிழந்தவர்கள் 42 வயதான பதூர் மற்றும் சலீம்

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

புல்மோட்டை பம் ஹவுஸ் (Pumb House) எனும் இடத்தில் விவசாய காணிக்குள் ஏற்பட்ட எல்லை பிரச்சினை காரணமாகவே இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த கைகலப்பில் புல்மோட்டை 01ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.எம். பதூர் (42) மற்றும் புல்மோட்டை, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எம். சலீம் (42) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம்  புல்மோட்டை ஆதார வைத்தியசாலைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...