Saturday, April 27, 2024
Home » ஊருக்குள் புகுந்த முதலை

ஊருக்குள் புகுந்த முதலை

by gayan
February 24, 2024 7:30 am 0 comment

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (22) இரவு ஊருக்குள் புகுந்த முதலையொன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இதேநேரம் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அருகில் குளக்கரைகள் உள்ளமையினால் அங்கிருக்கும் முதலைகள் ஊரை நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு சரியான நடவடிக்கை மேற்கொண்டு தீர்வை பெற்றுத்தருமாறு பிரதேசமக்கள் தெரிவித்தனர்.

(வாச்சிக்குடா விஷேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT