Saturday, April 27, 2024
Home » பாராளுமன்ற ஒன்றிய தலைவராக வசந்த யாப்பா பண்டார தெரிவு

பாராளுமன்ற ஒன்றிய தலைவராக வசந்த யாப்பா பண்டார தெரிவு

மலைநாட்டைப் பாதுகாத்தல்

by gayan
December 9, 2023 2:28 pm 0 comment

மலைநாட்டைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்தார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ வழிமொழிந்தார்.

கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பில் ஒன்றியத்தின் புதிய தலைவர் வலியுறுத்தியதுடன், ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ, கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன், வருண லியனகே, டபிள்யு.எச்.எம். தர்மசேன, மொஹமட் முஸம்மில், அப்துல் ஹலீம், உதயன கிரிந்திகொட மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT